துபாயில் சுன்னத் வல்ஜமாஅத் ஐக்கிய பேரவையின் சார்பில் 18.03.2009 புதன்கிழமை மாலை மீலாதும் - மௌலீதும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மஃரிபு தொழுகைக்குப் பின்னர் மௌலீது மஜ்லீசும், இஷா தொழுகைக்குப் பின்னர் காயல்பட்டணம் மவ்லவி அல்ஹாஜ் அல்ஹாபிழ் எம். சுலைமான் ஆலிம் மஹ்ளரி அவர்கள் “மீலாதும் மௌலீது” எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
மீலாத் குறித்தும், மவ்லீத் குறித்தும் அறிந்து கொள்ள விரும்பும் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெளிவு பெறலாம்.
பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரம் பெற : முஹம்மது மஹ்ரூப் 050- 42 55 253
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக