திங்கள், 31 ஆகஸ்ட், 2009

இரண்டாவது பத்தில், ரமலான்!

இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.


ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)


இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும்,சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.


"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது.

இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.


இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)

THANKS
JALAL RAHMAN,
SHEIK DAWOOD ABDUL MAJEED

மாணவர்களுக்கு பரிசுத் தொகை: ஆட்சியர் கோ.பிரகாஷ் வழங்கினார்


10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையை மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2008-09ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு அரசின் பரிசுத் தொகையை ஆட்சியர் பிரகாஷ் வழங்கினார்.

இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியர்கள் 18 பேருக்கு ரூ.27ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பட்டிணி தியாகம்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.".. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.".. என்று கேட்டார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)" என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து" என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு" என்று கூறினார்.

அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்" என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் , தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்" என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

ஆதாரம் புஹாரி எண் 3798

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விருந்தாளியை அழைத்துச்சென்ற அன்சாரித்தோழரின் வறுமை நிலை பாரீர். அவரது வீட்டில் குழந்தைகளுக்கான உணவு மட்டுமே உள்ளது. அன்சாரி தோழருக்கும் அவரது மனைவிக்கும் கூட அங்கே உணவில்லை. இந்த நிலையிலும், தனது குழந்தைகளை தூங்கவைத்து விட்டு குழந்தைகளின் உணவை அந்த விருந்தினருக்கு வழங்கி தனது வள்ளல் தன்மையை காட்டிய அந்த அன்சாரித்தோழர் அவர்களின் வாழ்க்கையே தியாகமாக இருந்தது.

அதனால் அல்லாஹ் ஒரு வசனத்தையே இறக்கி இந்த தோழரின் ஈகை குணத்தை கண்ணியப்படுத்தி, இத்தகைய குணமுடையவரே வெற்றியாளர்கள் என்று தன் அருள்மறையில் கூறும் அளவுக்கு அன்சாரித்தோழரின் வாழ்க்கை அமைந்ததை பார்த்து உள்ளபடியே இத்தகைய நற்குணத்தை நாமும் பெறவேண்டும் என்ற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

ஆனால் இன்று நடப்பதென்ன? நமது வீட்டிற்கு நமது உறவினர்கள் யாரேனும் வந்துவிட்டால் அவனை பார்த்த மாத்திரமே 'வந்துட்டான்யா வந்துட்டான்யா' என்று மனதில் கருவும் எத்துணையோ பேரை பார்க்கிறோம். வந்த விருந்தாளியை வேண்டா வெறுப்பாக கவனிப்பதையும் 'எப்படா எடத்த காலி பன்னுவான்' என்று நினைப்பவர்களையும் பார்க்கிறோம். கணவனின் உறவினர்கள் வந்துவிட்டால் மனைவிக்கு எரிகிறது.

மனைவியின் உறவினர்கள் வந்துவிட்டால் கணவனுக்குஎரிகிறது. இவ்வாறான மன நிலையுள்ளவர்கள் இன்றைய நவீன உலகில் இருக்க, அன்றோ யார் என்றே தெரியாத ஒருவருக்கு விருந்தளித்து கண்ணியப்படுத்திய அன்சாரித்தோழரின் வாழ்வில் நமக்கு மிகப்பெரிய படிப்பினை உள்ளது.

நன்றி:சஹாபாக்களின் வாழ்வினிலே!

இறையச்சம்

அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹ்

எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது.அவனின் சலாத்,சலாம்,பரக்கத் நம் உயிர்களைவிட உயர்ந்த மதிப்புள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் மீதும்,அவர்களின் குடும்பத்தினர்,தோழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படட்டும்.

நபி (ஸல்) நவின்றார்கள் :

நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்குத் தனது பிரத்யேகமான நிலை வழங்குகின்றான் :

1. நீதி தவறாத தலைவன்

2. இறைவனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்

3. இறையில்லத்துடன் தொடர்புபட்ட மனிதன்

4. இறைவனுக்காக நேசம் கொண்டு அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள்

5. அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (தூநடத்தைக்காக) அழைத்த போது, நான் இறைவனை அஞ்சுகின்றேன் என்று கூறிய மனிதன்

6. தமது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தர்மம் புரிந்த மனிதன்

7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் விடும் ஒரு மனிதன்
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.


பொதுவாகவே அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் மறுமை நாளில் மஹ்ஷர் வெளியில் மனிதர்களின் திண்டாட்டம் பற்றிக் கூறி இதயங்களை பற்றியிழுக்கின்றன. நபிமொழியொன்று மஹ்ஷரை இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது.

அந்நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிக அருகாமையில் கொண்டு வரப்படும். மனிதர்கள் தங்களின் செயற்பாடுகளுக்கேற்ப வியர்வையில் மூழ்கியிருப்பர். அவர்களுள் சிலரின் கரண்டைக் கால் வரையும், வேறு சிலரின் முழங்கால் வரையும், மற்றும் சிலரின் இடுப்பு வரையும், இன்னும் சிலரின் வாய் வரையும் வியர்வை மூடியிருக்கும் (முஸ்லிம்)..

இவ்வாறு மனிதர்களின் திண்டாட்டத்தை நபிமொழி சித்தரிக்கின்றது. இவ்வாறான இக்கட்டான நிலைமையில் இறை நிழலில் குளிர்காய இடம் கிட்டுமானால் அது அள்பபரிய பாக்கியமாகும்.

முஸ்லிம் நீதிமிக்கவன்.

இஸ்லாம் நீதிக்கு மிகவும் தெளிவாகச் சான்று பகர்கின்றது. குர்ஆன் இப்படிக் கூறுகின்றது:
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (4:135)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் :

மூன்று பிரிவினர் சுவனவாசிகள் ஆவர். அதில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நீதியாக நடக்கும் ஆட்சியாளன் (முஸ்லிம்).

நீதியை நிலைநிறுத்தும் தலைவருக்கு நிழலில்லாத நாளில் நிழல் கிடைக்கும் என்பது உறுதியே.

வாலிபம் ஓர் அருள்

வாலிபம் என்பது இறைவன் தந்த அருள். அது இறைவழியில் பயன்படுத்தப்பட வேண்டும். வாலிபம் உற்சாகத்தினதும் வேட்கையினதும் பருவமாகும். எனவே, இவ்வாலிபம் இறைமறையின் புரட்சிக்காய் அதன் சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதற்காய் தன்னிலும் மண்ணிலும் இறைபோதனைகள் வளர்வதற்காய் வாழுமானால் இவ்வாலிபம் நிழலுக்குச் சொந்தமாகும் என்பது இறைவழி காட்டும் உண்மையாகும்.

இறையில்லத் தொடர்பு

இறைவனது இல்லத்தோடு தொடர்பு வைத்துள்ள உள்ளங்களுக்கு இறையருள் உண்டு. மனிதன் தனது விவகாரங்களை இறையில்லத்துடன் தொடர்புபடுத்த வேண்டும். அமைதியற்ற வேளையில் இறையில்லத்தில் அமர்ந்து இறைவனைச் சிந்தியுங்கள். அமைதியின் பூங்காவாக மஸ்ஜிதை உணர்வீர்கள். மஸ்ஜிதின் வளர்ச்சியிலும், ஒழுங்கமைப்பிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது இறைநிழலுக்குச் சொந்தக்காரனாக மாற்றி விடுகிறது.

இறைவனுக்காக நேசம் கொள்ளல்

நேசம் என்பது இறைவனுக்காகவே இருக்க வேண்டும். குறிப்பாக, இஸ்லாமிய இலட்சியவாதிகளுக்க இப்பண்பு ன்றியமையாததாகும்.இறைவனுக்காக அமையும் நட்பும், பிரிவும் அர்ஷின் நிழலுக்குச் சொந்தம் பெற்றுத் தரும்.


இறையச்சம்

இறையச்சமே மனிதனை இழிவான ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும் சிறந்த சாதனமாகும். நிழலில்லாத நாளின் நிழலுக்குத் துணைபுரியும்.


தருமம் செய்தலும் இறைதிருப்தியும்

இறைவனுக்காக கொடுக்கப்படுகின்ற தர்மத்திற்கு கூலியிருக்கிறது. வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாது. இறைவனுக்காக வழங்கப்படும் தருமம் மறுமையில் நிழலின் சொந்தக்காரர்களாக மாற்றும்.


ஒரு சொட்டுக் கண்ணீர்

முஹாஸபா (சுயவிசாரணை) ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். வாழ்க்கையின் முன்னேற்த்திற்கும், அனுபவத்திற்கும் தவ்பாவிற்கும் சிறந்த ஊடகமாக சுயவிசாரணை அமைகிறது. ஒரு மனிதன் தனிமையில் தனது வாழ்வில் தான் நடந்து வந்த பாதையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இங்கு கூறப்பட்ட இறை நிழலுக்குச் சொந்தமானவர்களின் உள்ளங்கள் இறைவனோடு தொடர்புபட்டுள்ளது.வாருங்கள் மிக்க கொடுமையும் கருமையும் நிறைந்த மஹ்ஷர் வெளியின் வெப்பத்திலிருந்து எம்மைக் காப்பாற்ற முயற்சிப்போம்! அர்ஷின் நிழலில் குளிர்காய விழைவோம்!!

கல்வியும்-இஸ்லாமும்

கல்விக்கு இஸ்லாம் தரும் முக்கியத்துவத்தை பற்றியும், கற்றவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தையும்-நன்மையையும் முதல்பாகத்தில் கண்டோம். இத்தகைய சிறப்புகளை பெற்றுத்தரும் கல்வி எது என்பதை இந்த பாகத்தில் பார்ப்போம்.

கல்வியில் மூன்று வகை உண்டு;

*மார்க்க கல்வி

*மார்க்கம் அனுமதித்த உலக கல்வி

*மார்க்கம் தடை செய்த உதவாக்கல்வி

மார்க்க கல்வியை பொறுத்தவரையில் அது இம்மைக்கும்-மறுமைக்கும் பயனளிப்பவையாகும். ஆனால் துரதிஷ்டவசமாக இஸ்லாமிய சமூகம் மார்க்க கல்விக்கு இரண்டாம் இடத்தை வழங்கிவிட்டு, உலக கல்விக்கு முதலிடத்தை வழங்கி முக்கியத்துவம் அளிக்கிறது. காரணம் மார்க்க கல்வியை கற்பதால் பொருளாதார ரீதியில் என்ன பலன் என்ற கணக்கு போடுவதுதான்.

தன்னுடைய பிள்ளையை எல்.கே.ஜி.யில் சேர்க்க இரவு பகலாக முயற்ச்சிக்கும் பெற்றோர், மதரசாவில் சேர்ப்பதற்கு பெரிய அளவில் 'ரிஸ்க்' எடுப்பதில்லை. சில ஊர்களில் காலையில் பள்ளிவாசல் இமாம் ஓதிக்கொடுக்கும் மதரசாவிற்கு செல்லும் பிள்ளைகளை பார்த்தால் தூங்கிய முகத்தோடு, கிழிந்த அல்-குர்ஆணை எடுத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக செல்வதை பார்க்கலாம்.

அதே நேரத்தில் உலக கல்வி கற்க பள்ளிக்கு செல்லும்போது குளித்துமுழுகி, பவுடரடித்து, சீருடை அணிந்து அழகாக செல்வதை காணலாம். இதற்கு காரணம் அந்த பிள்ளைகளல்ல பெற்றவர்கள்தான். உலக கல்விக்கு தரும் இந்த முக்கியத்துவத்தை மார்க்க கல்விக்கும் தரவேண்டும். உலக கல்வியின் பலன் இந்த உலகத்தோடு முற்றுப்பெற்று விடும்.

மார்க்க கல்வி ஒன்றே மறுமைவரை துணையிருக்கும் என்பதையும், என்னதான் உலக கல்வியில் உச்சத்திற்கு சென்றாலும் மார்க்ககல்வி கற்றவர்களால்தான் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் தங்களின் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் பெற்றோர்களும் உணரவேண்டும். பிள்ளைகளும் உணரவேண்டும்.

அன்று அருமை சகாபாக்கள்மார்க்கத்தை கற்பதில் எந்த அளவுக்கு ஆர்வமாய் இருந்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சான்று;

உமர்[ரலி] அறிவித்தார்கள்;'நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார்.[புஹாரி]

பெண்களின் ஆர்வம்;

(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்.[புஹாரி]

மேற்கண்ட இரு நபி மொழிகளும் மார்க்கத்தை அறிந்து கொள்வதில் சத்திய சகாபாக்களுக்கு இருந்த ஆர்வத்தை படம்பிடித்து காட்டுகிறது. அதுபோல் நாமும் மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

உலக கல்வி;

உலக கல்வியை பொறுத்தவரையில் மார்க்கத்திற்கு உட்பட்டு அதை கற்பதில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக கல்வியை தூண்டக்கூடிய மார்க்கத்திற்கு சொந்தக்காரர்களாகிய நம் சமுதாயம், ஏனைய சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது.

இதற்கு காரணம் அறியாமை ஒருபுறம். வறுமை மறுபுறம். நம் பிள்ளை என்னத்த படிச்சாலும் நமக்கு என்ன அரசாங்க உத்தியோகமா கெடைக்க போகுது என்ற விரக்தி நம் மக்கள் மத்தியில் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அரசாங்கம் வேலை வாய்ப்பு தந்தால், அதை ஏற்கும் தகுதியுடைய கல்விமான்களாக நாம் தயாராக வேண்டும் எனபதை ஏனோ மறந்து விட்டோம்.

எதோ கையெழுத்து போடும் அளவுக்கு படிப்பது; மீசை வளர்ந்தவுடன் பாஸ்போர்ட் எடுப்பது; வளமான இளமையை வளைகுடாவில் தொலைப்பது; இப்படியே நம் சமுதாய மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். இட ஒதுக்கீடு கொடு என்று கேட்பதற்கு முன்னால், அந்த இடத்திற்கு தகுதியானவர்களாக நாம் மாறவேண்டும்.

நம் சமுதாயம் கல்வியில் பின் தங்கியிருப்பதற்கு வறுமை காரணம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அரசாங்கம் இலவசமாக புத்தகம் வழங்கினாலும், தன் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட மற்ற பொருட்கள் வாங்கி கொடுப்பதற்கு இயலாத எத்துணையோ பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

மேலும் மேல்படிப்பிற்கு செலவு செய்ய முடியாத பெற்றோர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை இடை நிறுத்தம் செய்துவிடாமல் கண்காணித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும்.

கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் பணத்தில் குறைந்த பட்சம் நூறு பட்டதாரிகளை உருவாக்கிவிடலாம். உப்பு சப்பில்லாத விசயத்திற்கு கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யும் பணத்தில் பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிவிடலாம். இதையெல்லாம், சமுதாயத்தில் உள்ளவர்களிடம் வசூல் செய்து அமைப்பு நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் வறிய நிலையில் உள்ள முஸ்லீம் மாணவமணிகளுக்கு இலவச/குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க முன்வரவேண்டும்.

உதவா கல்வி;

சில வசதி படைத்த முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ் இதுபோன்ற மார்க்கம் தடுத்த கல்விகளுக்கு பயிற்றுவிக்கிறார்கள் . நிச்சயமாக இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இந்த கல்வி நன்மைக்கு பதிலாக தீமையையே பெற்றுத்தரும் எனபதை விளங்கவேண்டும்.

கல்விக்காக பிராத்தியுங்கள்;

فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (20:114)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தைச் மார்க்க கல்வியிலும்-உலக கல்வியிலும் தேர்ந்த சமுதாயமாக ஆக்கி அருள்வானாக!

But, who ever turns away from the Quran he will have a hard life, and We will raise him up blind on the Day of Judgment.
Al Quran (20:124)

மேலும் அவர்கள் இந்தக் குரானை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இருதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா?
Al Quran (47:24)

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ, அவர்க்ளுக்கு பயமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.( குர்ஆன் 46:13)

Trichy - Yusuf. Dubai
+971 50 6374929

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

உங்களுடைய மீடியாபிளேயரை இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?

நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes.

இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது மீடியாபிளேயரை இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது மீடியா பிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியா பிளேயரை மினிமைஸ் செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் யூ‍‍-டியூப் தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு

சந்திராயன் விண்கலத்துடன் தகவல் தொடர்பு துண்டிப்பு


நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை 'சந்திராயன்-1' திட்ட இயக்குநர் எம்.அண்ணாதுரை பெங்களூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

எனினும், தொழில்நுட்ப ரீதியாக சந்திராயன் விண்கலம் 100 சதவீதம் முழுமையாக செயல்பட்டுள்ளது என்றும், தனது பணிகளில் 90 முதல் 95 சதவீதம் அறிவியல்பூர்வமாக பூர்த்தி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2008 அக்டோபர் 22ம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலத்தின் பணிக்காலம் 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக அதன் பணி முடிவடைந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமளான் சிந்தனை !

அழைப்பு

நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க ரமதானில் சரி பார்க்க தினப்படிவம்

1. ஸஹ்ர் உணவை பிற்படுத்தி கடைசி நேரத்தில் (பஜ்ர் அதானுக்கு பத்து நிமிடம் முன்பு) உண்டீர்களா?

2. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?

3. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?

4. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?

5. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?

6. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?

7. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?

8. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்திஇர்களா

9. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?

10. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?

11. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன்
தொழுதீர்களா? (ஆண்களுக்கு)

12. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?

13. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?

14. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?

15. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?

16. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?

17. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?

18. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?

19. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?

20. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?

21. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?

22. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?

23. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)

24. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?

25. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?

26. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?

27. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?

28. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?

29. உங்களுடைய உணவிலிருந்து உங்களை அடுத்துள்ளோருக்கும் நோன்பு திறக்க உதவினீர்களா?

29a. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?

30. நோன்பை அதன் முதல் நேரத்தில் துரிதப்படுத்தி திறந்தீர்களா?

31. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?

32. இரவுத் தொழுகையை (அல்லது தராவீஹ்) தொழுதீர்களா?

33. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?

34. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?

35. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?

36. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?

37. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?

38. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?

39. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா?

வெள்ளிக்கிழமைக்கு (கூடுதலாக)

40. சூரா கஹ்ப் (குகை) அத்தியாயத்தை ஓதினீர்களா?

41. உங்களை அழகு படுத்திக் கொள்ளவும் அதை சரிவர தொடர்வதற்காகவும் கூடுதல் கவனம் செலுத்தினீர்களா?

42. ஜூம்ஆ தொழுகையை அதன் முதல் நேரத்தில் தொழும் சிறந்த கூட்டத்தில் உங்களை இணைத்துக் கொண்டீர்களா?

43. இன்றைய குத்பாவில் கூறப்பெற்ற விஷயத்தைப் பற்றி குறைந்தது பத்து நிமிடங்களாவது சிநதித்தீர்களா ?

ஒரு வாரத்துக்கு - சிறப்பாக

1. குர்ஆனிலிருந்து ஒரு கால் பக்கமாவது மனனம் செய்தீர்களா?

2. தேவையுள்ள யாருக்காவது உணவு மற்றும் துணிகள் கொடுத்தீர்களா? யாருக்காவது ஏதும் அன்பளிப்புகள் வழங்கினீர்களா?

3. இறைத்தூதுவரின் ஹதீஸ்களிலிருந்து ஏதாவதொன்றை மனனம் செய்தீர்களா?

4. இறைத்தூதுவரின் சுன்னத்திலுள்ள ஏதாவது ஒரு துஆவை மனனம் செய்தீர்களா?

5. வேறுபட்டு பிரிந்துள்ள இரு மனிதர்களின் இதயங்கள் அன்பினால் இணைய உதவினீர்களா?

சனி, 29 ஆகஸ்ட், 2009

ஜெ.பி. நெல்லை பட்டணம், ஆர்.கே. ஹவுசிங் மனைகளை வாங்க வேண்டாம்: ஆட்சியர்

திருநெல்வேலியில் அனுமதி பெறாத ஜெ.பி. நெல்லை பட்டணம், ஆர்.கே. ஹவுசிங் ஆகிய நிறுவனங்களின் வீட்டுமனைகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி உள்ளூர் திட்டக் குழுமப் பகுதிக்குள் அமைந்துள்ள மாநகராட்சிப் பகுதி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ஜெ.பி. நெல்லை பட்டணம், ஆர்.கே. ஹவுசிங் மற்றும் பல நிறுவனங்கள் வீட்டுமனைப் பிரிவுக்கு உள்ளூர் திட்டக் குழுமத்தில் தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் திட்ட அனுமதி பெறவில்லை.

அந் நிறுவனங்கள் மற்றும் சில தனிநபர்கள், அங்கீகாரம் பெற்ற மனைகள் என விளம்பரம் செய்து வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

அனுமதி வழங்கப்படாத அந்த மனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளாட்சிகளால் வழங்க இயலாது. எனவே, அனுமதியற்ற அந்த மனைப் பிரிவுகளை பொதுமக்கள் வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பொதுமக்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரேஷன் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பறக்கும்படை வட்டாட்சியர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், செக்காரக்குடி கிராம நிர்வாக அதிகாரி இம்மானுவேல் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர்
.
தெய்வச்செயல்புரம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேர் அதிகாரிகளை கண்டதும் தாங்கள் கொண்டு வந்த 2 மூட்டைகளை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

அதிகாரிகள் அருகில் சென்று பார்த்தபோது மூட்டையில் ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டறிந்து அவற்றை கைப்பற்றினர்.

இதேபோல, கீழசெக்காரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு உள்பட்ட ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சோதனை செய்ததில் 5 மூட்டை உளுந்தம் பருப்பு, ஒரு மூட்டை துவரம் பருப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, சங்கச் செயலர் சுப்புலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சங்கத்திற்கு அருகிலுள்ள ரேஷன் கடையில் 364 கிலோ அரிசி, 46 கிலோ சீனி இருப்பு குறைவாக இருந்ததால் அந்த விற்பனையாளருக்கு ரூ. 2,980 அபராதம் விதிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ரேஷன் பொருள்கள் ஸ்ரீவைகுண்டம் நுகர்வோர் சேமிப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன

ஸ்ரீவைகுண்டத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம்

ஸ்ரீவைகுண்டத்தில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜை நடத்தப்பட்டது. பின்னர், தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

இதையொட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் ஊர்வலம் நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். ராஜதேவமித்திரன் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கிவைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் முத்தையா பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டத் தலைவர் வேலு, இந்து முன்னணி ஒன்றியச் செயலர் பாலதண்டாயுதம், நகரத் தலைவர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில் பாஜக பொதுச்செயலர் ராஜா, இளைஞரணி பொதுச்செயலர் முத்துராமலிங்கம், நகரத் தலைவர் மணி, ஆர்.எஸ்.எஸ். ஒன்றியப் பொருளாளர் அயோத்தி சங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.எல்.ஏ. நன்றி தெரிவிப்பு

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம்.பி. சுடலையாண்டி எம்.எல்.ஏ வெள்ளிக்கிழமை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் செய்தார்.

பழையகாயலில் மாலை 5 மணிக்கு சுடலையாண்டி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து புல்லாவெளி, கோவங்காடு, மஞ்சள்நீர்காயல், அகரம், மாரமங்கலம், இடையர்காடு, முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.

அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். ஜஸ்டின், ஒன்றியக் குழு உறுப்பினர் இளங்கோ, பொட்டல் ஆறுமுகம், ராயப்பன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

துபாய்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் இணையத்தளம் துவக்கம்

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களது வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கான பிரத்யேக இணையத்தளம் www.jamalians.com துவக்க நிகழ்ச்சி லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கலந்தர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் நமது கல்லூரியின் முன்னாள் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராகி பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

அபதுல் ஷுக்கூர் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வருடந்தோறும் கல்லூரியில் முன்னாள் மாணவர் தினமாக அனுசரித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதில் தனக்கும் இவ்விருது வழங்கியதை நினைவு கூர்ந்தார்.

ஈடிஏ அஸ்கான் மனிதவள மேம்பாட்டுத்துறை நிர்வாக செயல் தலைவர் எம். அக்பர் கான் கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள www.jamalians.com என்ற இணையத்தளத்தினை துவக்கி வைத்தார்.

இதற்காக தங்களது பங்களிப்பினை நல்கிய ஃபரீஜ், ஜாபர் சித்தீக், அப்துல் ஷுக்கூர், இல்யாஸ், பதாவுல்லாஹ், மீரான், சுல்தான், ஜாவித் உள்ளிட்டோரைப் பாராட்டினார்.

வேலூர் எம்.பி. எம். அப்துல் ரஹ்மான், கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் ஆற்றி வரும் பணிகள் அளவிடற்கரியது. எம்பி ன மட்டுமல்லாது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற வகையில் எனது பணிகள் என்றும் தொடரும் என்றார்.

கல்லூரியின் வளர்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமாரின் பணிகளை நினைவு கூர்ந்தார்.எந்த் நேரத்திலும் கல்லூரிக்கு தனது சேவை தொடரும் என்றார்.

கல்லூரி முன்னாள் மாணவர்கள் எம். அப்துல் கத்தீம்,எஸ்.எம். ஃபாரூக், ஹாமித், முத்து உள்ளிட்டோர் தங்களது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.

ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். ஜாபர் சித்திக் நன்றி கூறினார். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் செப்டம்பரில் பி.எஸ்.என்.எல். மேளா: சலுகை கட்டணத்தில் லேண்ட்லைன்


தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாள் மேளா நடத்த பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதில் சலுகை கட்டணத்தில் லேண்ட் லைன் இணைப்பு வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் நடராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும் பிராட் பேன்ட் வசதி ஆகஸ்ட் 15ம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அந்தந்த தொலைபேசி நிலையங்களில் விண்ணப்பித்து ப்ராட்பேண்ட் இணைப்புகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்.

தூத்துக்குடி மொபைல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிகமான கவரேஜை ஏற்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் மேலும் 46 செல்டவர் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேலைகள் முடிந்து வரும் பொங்கல் அன்று இந்த செல்டவர்கள் இயங்கத் துவங்கும்.

மாவட்டத்தில் 35 இடங்களில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் மேளா நடத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதில் 500ரூபாய் இணைப்புக் கட்டணம் தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். மேலும், வில்போன் ப்ரிபெய்டு சேவையும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.750க்கு மேல் உள்ள திட்டங்களில் ப்ராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும மோடம் இலவசமாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள 29 தொலைபேசி நிலையங்கள் மூலமாக ப்ராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நோவா நெட் கம்ப்யூட்டர் ரூ.1,900க்கு வழங்கப்படும்.

மேலும் இந்த மேளாவில் ரூ.20க்கு, வசந்தம் மற்றும் நியூ தமிழ்நாடு ஆனந் திட்டங்களில் லைப்டைம் கார்டுகள் கிடைக்கும். இந்த சிம்கார்டில் ரூ.5 மதிப்புள்ள டாக்டைமில் பேசிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். உடன் உதவி பொது மேலாளர் தாமஸ், துணை கோட்ட பொறியாளர்கள் (வர்த்தகம்) லிங்கபாஸ்கர், (வர்த்தக அபிவிருத்தி) வளனரசு, இளநிலை தொலை தொடர்பு அலுவலர் (வணிகம்) சுரேஷ், செய்தித் தெடர்பாளர் மாரிமுத்து ஆகியோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.

ஜாஹிர் நாயக் கேள்வி-பதில்


துபை:டாக்டர் ஜாஹிர் நாயக் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்ற ஐரோப்பிய பெண்மணி பிரபல இஸ்லாமிய அறிஞரும் உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கும் பிறமதங்களுக்கிடையேயான விவாதங்களை வெற்றிகரமாக நடத்தி வரும்இந்தியாவின் மும்பை நகரத்தைச்சார்ந்த டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்கள்துபை அரசு சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடத்தி வரும் புனிதகுர்ஆன் விருது நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சியில்பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 27,28 தினங்களில் உரை நிகழ்த்தினார்

இவ்வுரை நிகழ்ச்சிகள் துபை ஏர்போர்ட் எக்ஸ்போ என்ற பிரமாண்ட அரங்கில்நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுமார் 22 ஆயிரம் பேர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது பல்வேறுசமயங்களைச்சார்ந்தோறும் கலந்துக்கொண்டனர்.முதல் நிகழ்ச்சியில் "அழைப்பு பணியா அல்லது அழிவா”(“Dawaah or Destruction”) என்ற தலைப்பில் தாஃவாவின் முக்கியத்துவம் குறித்துகுர்ஆன்,சுன்னா ஆதாரங்களுடன் உதாரணங்களையும் கூறி சிறப்பானதொருஉரையை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்கலந்துக்கொண்டு ஐரோப்பாவைச்சார்ந்த பெண்மணி ஒருவர் இஸ்லாம் குறித்துதர்க்கரீதியான(Logic) கேள்வியொன்றை எழுப்பினார்.அவருடைய கேள்விக்குஅறிவுப்பூர்வமான பதிலை டாக்டர்.ஜாஹிர் நாயக் அவர்கள் கூறியதைக்கேட்டுதிருப்தியடைந்த அப்பெண்மணி சத்தியம் இதுதான் என்று தெளிவானதும்ஷஹாதா கலிமா சொல்லி இஸ்லாத்தை ஒப்புக்கொண்டார்.(அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தில் அவருடைய பாதங்களை உறுதிப்படுத்துவானாக).

டாக்டர் ஜாஹிர் நாயக்கின் நிகழ்ச்சியின் காரணமாக துபாய் ஏர்போர்ட்டெர்மினல் 3க்கு செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்காணப்பட்டது.

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடந்த 2009, பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை நடத்தியது.

தமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள், இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

2009-2010ம் ஆண்டிற் கான நிதி நிலை அறிக்கை யில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக் கள் மற்றும் மத்ரஸாக் களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக் கென உலமாக்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரி யம் ஒன்று அமைக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட் டது.

மேற்காணும் அறிவிப் பின்படி தமிழ்நாட்டி லுள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதர ஸாக்களில் உள்ள உலமாக் கள் மற்றும் பணியாளர் களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதர ஸாக்களில் பணிபுரி யும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரி யர்கள்ஃஆசிரியைகள், மோதினார் கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக் காக்கள், ஆஷ_ர்கானாக் கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள் ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க லாம்.

இவ்வாறான நிறுவ னங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற் படாத பணியாளர் கள் பதிவு பெற தகுதியு டையவர்கள் என அரசு ஆணை யிடுகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்திற்கு சுற்று சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக நியமனம் செய்யப்படுகி றார். இவ்வாரியத்தில் அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகக் கீழ்க்கண்ட அலு வலர்கள் நியமிக்கப்படு கிறார்கள்.
அரசு சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறு பான்மை அரசு நலத்துறை செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த்துறை முதன் மைச் செயலாளர், சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச்செயலா ளர், தொழிலாளர் நலத் துறை ஆணையாளர், சிறு பான்மை நலன் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர், தமிழ் நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவ லர் ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்

தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,

மாநில பொதுச் செயலாளரும் மாநில பொருளா ளர் மௌலவிஎஸ்.எம். முஹம்மது தாஹா. மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி ஓ.எம். அப்துல் காதிர்,

திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அல்ஹசனாத் துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி டி.ஜே.எம். சலாஹ{த்தீன்.

வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது வலியுல்லாஹ், மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி. காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை ஷர்புத்தின்.

சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமா மான மௌலவிஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ், மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌ லவி முஹம்மது இஸ்மா யில் நாஜி, குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி முஹம்மது அய்ய+ப்,

தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாள ரும், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரி யருமான மௌலவி எஸ். முஜீபுர் ரஹ்மான்.

தமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது ய+னுஸ், தமிழ் நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல சங்கம் மாநில பொதுச் செயலா ளர் முஹம்மது அலி பேக்.

தமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன், சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி ஆகியோர் உறுப்பி னர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொரு ளாதார மேம்பாட்டிற் கான அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண் காணித்து இப்பிரிவினரின் மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனை களை இவ்வாரியம் அரசுக்கு வழங்கும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர் களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச் செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள் வழங்கு வதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்ட வாறு ஆணையிடகிறது.

அமைப்பு சாரா தொழி லாளர் நல வாரியத்தில் பதிவு செய்தள்ள உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் களாக பதிவு செய்த கொள் பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங் கப்படும்:

விபத்து ஈட்டுறுதி திட்டம் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1லட்சம் உதவித் தொகை.
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10ஆயி ரம் முதல் ரூ.1லட்சம் வரை. இயற்கை மரணத்திற் குள்ளானவர் குடும்பத் திற்கு உதவித் தொகை ரூ. 15ஆயிரம்.

கல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ஆயிரம் ரூபாய், 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய், 12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந் தைக்கு ரூ.1,500 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500, முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,500, மாணவர் இல்ல வசதியு டன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,750, முறை யான பட்ட மேற்படிப் புக்கு ரூ.2 ஆயிரம், மாண வர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்ப டிப்புக்கு ரூ. 3 ஆயிரம்.

தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2ஆயிரம், மாணவர் இல்ல வசதியு டன் தொழிற் கல்வி பட் டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழிற் கல்வி மேற்படிப் புக்கு ரூ.4 ஆயிரம், மாண வர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ. 6 ஆயிரம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000, மாணவர் இல்ல வசதியு டன் ஐ.டி.ஐ. அல்லது பல் தொழில் பயிற்சி படிப்புக்கு 1,200, திருமண உதவித் தொகை ரூ.2ஆயிரம்.

மருத்துவ உதவித் தொகை மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000 ரூபாய், கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000, மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வ+தியம் மாதந்தோறும் ரூ.400.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன் மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகி றார்.

18வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடி வடையாத ஒவ்வொரு வரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்ற வராவார். தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வ+தியத் திட்டத்தின் கீழ் ஓய்வ+தியம் பெறுபவர் களுக்கு இந் நலவாரியத் தில் முதியோர் ஓய்வ+தியம் வழங்கப்படக் கூடாது.

உறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப் பட்ட உறுப்பினர் சேர்க்கைவிண்ணப்பங் களைத் தொகுத்து, உறுப் பினர்களுக்கு அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள்ஃவக்ஃபு ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின லந அலவலர் வாங்குவார். நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான உறுப் பினர்களுக்கு நல உதவி களை மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கப் படும்.

வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண் ணப்ப படிவம், வாரியத் தின் விதிமுறைகள், வாரி யத்தின் இதர செயல்பாடு கள் முதலிய அனைத்திற் கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின் மூலம் நடைமுறைப்படுத் தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப் படும் அனைத்து நடை முறைகளும் மேற்கொள் ளப்படும்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கு வதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தின் நிதியிலிருந்து வழங் கப்படும்.
மேற்காணும் நிதி உதவி கள் யாவும் தகுதியான நபர் களுக்கு மட்டுமே அளிக் கப்படும்.

அரசுஃஅரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங் களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை யும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது. வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உல மாக்கள் மற்றும் பணியா ளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும் தான் நலத்திட்ட உதவி களைப் பெற தகுதியுடைய வர் ஆவார்.

மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சிராக நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில் உலமாக்கள் மற்றும் பணி யாளர்கள் நல வாரியத் திற்கு அதிகாரம் அளித்து அணையிடப்படுகிறது. சேர்க்கப்பட்ட உறுப் பினர்களின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங் களின் எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண் ணிக்கை மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்ற விவரங் கள் அடங்கிய அறிக்கை யினை பதினைந்து நாட் களுக்கு ஒரு முறை அர சுக்கு அனுப்பி வைக்குமறு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள் ளப்படுகிறார்.

புதியதாகத் தோற்றுவிக் கப்படும் இந்நலவாரியத் தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக் காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக் கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு ஆலோ சனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாகவும் (தினப்படிஃபயணப்படி பெறுவதற்கு), இதன் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை வெளியிடுகிறது.
மேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப் படும்.

உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற பணி களை மேற்கொள்வதற்கா கவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்திற்கு ரூ. 10 லவட்ம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் கேட்ட தொகைக்கு பாதி பணம்:


திருநெல்வேலி சந்திப்பு பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர் இருவருக்கு பாதித் தொகைக்கான பணம் மட்டுமே கிடைத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சி.என். கிராமத்தைச் சேர்ந்த ஆர். இசக்கி என்பவர் பணம் எடுக்க வந்தார்.அவர், ரூ.7 ஆயிரம் எடுக்க இயந்திரத்தை இயக்கினார். அவருக்கு கையில் கிடைத்தது ரூ. 3 ஆயிரம் மட்டும்தான். ஆனால், ரூ. 7 ஆயிரம் எடுக்கப்பட்டதாக ரசீது வந்தது. அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அவருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் சந்திரராஜ் நின்றார். அவருக்கு ரூ. 30 ஆயிரம் தேவைப்பட்டது. ஒரே நேரத்தில் ரூ. 30 ஆயிரம் எடுக்கமுடியாது என்பதால், அவர் முதலில் ரூ. 15 ஆயிரம் எடுக்க முயன்றார். பணம் கிடைத்தது. அதை சரிபார்க்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

இரண்டாவதாக ரூ. 15 ஆயிரம் எடுக்க முயன்றார். இரண்டாவது முறையாக கிடைத்த பணத்தையும் முதலில் எடுத்த பணத்தையும் சேர்த்து எண்ணினார். ரூ. 30 ஆயிரத்திற்குப் பதிலாக ரூ. 17,500 மட்டுமே இருந்ததைத் அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆனால், தலா ரூ.15ஆயிரம் எடுக்கப்பட்டதாக ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அங்கிருந்த காவலாளியிடம் இருவரும் புகார் தெரிவித்தனர். இந்த தகவல், வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும், ஏடிஎம் மையம் தாற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர், வங்கி தலைமை மேலாளர் கோமதிநாயகம் கூறியதாவது:
வாடிக்கையாளர் இருவருக்கு பணம் குறைவாக கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மனு எழுதிக் கொடுத்து மீதிப் பணத்தை வங்கியில் பெற்றுச் கொள்ளலாம்.
பணம் எடுக்கும்போது மின்தடை ஏற்பட்டு இருந்தால் இதுபோன்று சம்பவங்கள் நேரிட வாய்ப்பு உள்ளது.
ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது ஏற்படும் சிறிய பழுதுகள் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்

மேலப்பாளையத்தில் தமுமுக வார்டு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மேலப்பாளையம் 29-வது வார்டு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ். ரசூல்மைதீன் தலைமை வகித்தார். வார்டு தலைவர் செய்யது அப்துல் காதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மேலப்பாளையம் அமீன்புரம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும்.

2. காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

3. மேலப்பாளையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி குடிநீர்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 87 கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு இல்லை.

இக்கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, இத்தொகுதி எம்.எல்.ஏ. சுடலையாண்டி தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் மனு கொடுத்தார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி. சுடலையாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக வியாழக்கிழமை சென்னையில் பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உள்பட்ட தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஒன்றியங்களில் 87 கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு இல்லை.

இந்த கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

அறி(ரி)ய தகவல்.

ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!


சக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோம்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.

இஸ்லாமியரின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக புனித ரமலான் நோம்பு கருதப்படுகிறது. ரமலான் நோம்பு வைக்கும் சக்கரை நோயாளிகள் பற்றிப் பார்ப்போம்.

நோம்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில் உணவு உட்கொள்கிறார்கள்.

பகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது? நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது. நோம்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.

சக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோம்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.

1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோம்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.

2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.

3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.

4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.

மாத்திரைகள்:

இந்த வகையில் சிடாகிளிப்டின், நேடிகிளினைட்,ரிபாகிளினைட் ஆகிய மாத்திரைகள் இந்த வகையில் வருகின்றன.

இன்சுலின்கள்:


அபிட்ரா, லிச்ப்ரொ, அஸ்பார்ட் ஆகிய இன்சுலின்கள் இதற்கு உதவும்.

மேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.

நன்றி:தமிழ்த்துளி

தீண்டாமை தீண்டாத இஸ்லாம்! அர்ஜுன் சம்பத்- தலைவர், இந்து மக்கள் கட்சி


இந்திய சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும் என்கிற தூய நோக்கத்துடன் இடஒதுக்கீடு என்கிற கருத்துரு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்து சமூகத்தில் தீண்டாமை இழிவுகளால் நீண்டகாலமாக கொடுந்துன்பத்துக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களுக்கு சமநிலையும், சம அந்தஸ்தும், சம வாய்ப்பும் கிடைத்திட வேண்டும் என்பதே இடஒதுக்கீட்டு தத்துவத்தின் அடிப்படை நோக்கமாகும்.


தீண்டாமை இழிவுகளால் எந்தச் சமூகம் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளதோ அந்தச் சமூகம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றது. இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பதற்குத் தகுதி படைத்தோரைக் கண்டறிய அளவுகோலாக தீண்டாமைக் கொடுமைகளே கணக்கில் கொள்ளப்பட்டன.தீண்டாமை இழிவுகள் என்பது பொது வீதி, பொதுக் கிணறு, குளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி மறுப்பு, பெண்கள் மேலாடை அணியும் உரிமை மறுப்பு, காலில் செருப்பு அணிந்து பொது வீதியில் நடக்க உரிமை மறுப்பு, ஆலயங்களுக்குள் நுழைய அனுமதி மறுப்பு, சமமாக அமர்வதற்குக்கூட உரிமை மறுப்பு, கல்வி கற்க அனுமதி மறுப்பு, சுடுகாடுகளில் கூட தனி சுடுகாடு, வசிப்பிடங்கள் கூட ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட சேரிப் பகுதி, இரட்டைக் குவளை முறை, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என பட்டியல் நீள்கிறது.தீண்டாமைக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமயத் துறையிலும், ஆன்மிகத் துறையிலும் சம நீதி கிடைத்திட ஆதிசங்கரர், ராமானுஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்ட அருளாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து பாடுபட்டனர்.


ஸ்ரீராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், வீடுபேறு அடைந்திடும் உரிமை உண்டு என்கிற உரிமையை நிலைநாட்டி எட்டெழுத்து மந்திரத்தை அனைவருக்கும் உபதேசம் செய்து, பெரும் புரட்சியை உருவாக்கினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருக்குலத்தோர் எனப் பெயரிட்டு அழைத்துச் சிறப்பித்தார்.ஆன்மிகவாதிகளைத் தொடர்ந்து சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா புலே, ஸ்ரீநாராயணகுரு, சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர் உள்ளிட்டோர் சமுதாய அமைப்பில் தீண்டாமையை ஒழிக்கத் தொடர் முயற்சிகளைச் செய்து வந்தனர். திலகர், வீரசாவர்க்கர், டாக்டர் ஹெட்கேவார், அண்ணல் காந்தியடிகள், அம்பேத்கர் உள்ளிட்டோர் மக்களுக்கு சமூகத்திலும், அரசியலிலும், ஆட்சி அதிகாரங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்று ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதில், அண்ணல் காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனங்கள் எனப் பெயரிட்டு அழைத்தார்.அண்ணல் அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக தம்மை அர்பணித்துக் கொண்டார். இடஒதுக்கீடு என்ற ஆயுதத்தின் மூலம் இந்து சமுதாயத்துக்குள் பிரிவுகளை உருவாக்கி, மக்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முயற்சி செய்தனர்.

ஆங்கிலேயர்களின் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு பல நற்பணிகளைச் செய்தவர் அம்பேத்கர். இடஒதுக்கீட்டின் பலன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேரடியாகக் கிடைத்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அவர்.ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் சுதந்திரப் போராட்டத்தின்போதே வகுப்புவாத பிரதிநிதித்துவக் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது.

தீண்டாமை ஒழிப்புக் கொள்கையும், வகுப்பு வாத பிரதிநிதித்துவக் கொள்கையும் இருவேறுபட்ட தன்மையுடையதாகும். தீண்டாமை ஒழிப்புக்கும், வகுப்புவாத பிரதிநிதித்துவக் கொள்கைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அம்பேத்கரின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, தீண்டாமையையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் ஓரளவுக்காவது ஒழித்துக்கட்ட உதவியது.வகுப்புவாத பிரதிநிதித்துவக் கொள்கையின்படி நடைமுறைப்படுத்துகின்ற இடஒதுக்கீட்டுத் திட்டங்கள் மேலும் மேலும் சாதி வேறுபாடுகளை அதிகப்படுத்தியதோடு தீண்டாமைக் கொடுமை தொடர்ந்திடவும் வழிவகுத்தன. புதிது புதிதாக சாதிச் சங்கங்கள் உருவாகவும் சாதிக் கட்சிகள் தோன்றவும் வழிவகை செய்தன.

பொதுவாக, தாழ்த்தப்பட்ட மக்கள் தற்போது தலித் என்று பரவலாக அழைக்கப்பட்டு, அடையாளம் காணப்படுகின்றனர்.தற்போது இடஒதுக்கீடு என்பது நான்கு பிரிவுகளாக மத்திய, மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதலாவதாக, "எஸ்.சி.' என்று அழைக்கப்படுகின்ற பட்டியல் சாதியினர், (schedule caste) அரிஜனங்கள், தலித்துகள் ஆகியோர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாவதாக, "எஸ்.டி.' என்று அழைக்கப்படுகின்ற மலைச்சாதியினர், ஆதிவாசிகள் இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் (schedule tribes) இடம்பெற்றுள்ளனர். மூன்றாவதாக, "பி.சி.' (Backward class) என்று அழைக்கப்படுகின்றவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதியினர் ஆவர். நான்காவதாக, "எம்.பி.சி.' (Most backward class) என்று அழைக்கப்படுகின்றவர்கள் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சாதியினர் ஆவர்.


இப்படி நான்கு விதமாக, இடஒதுக்கீட்டுச் சலுகைகள் அமல்படுத்தப்படுகிறது. இந்த நான்கு பட்டியல்களிலும் இடம்பெறாத சாதியினர் "ஒ.சி.', (other caste) இதர சாதியினர் அல்லது "எப்.சி.' (forward caste) முற்பட்ட சாதியினர் என்று அழைக்கப்படுகின்றனர்.தற்போது முற்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற வேண்டும் என்கிற உள் நோக்கத்துடன் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர்.

இதில், சில சாதியினர் வெற்றியும் அடைந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாதியினர் தங்களை மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர். இதிலும், சிலர் வெற்றியும் பெற்றுள்ளனர்.மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சாதியினர் தங்களை எஸ்.சி., எஸ்.டி., பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு சலுகைகளை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். இதிலும், சிலர் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக, இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை நோக்கமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமநீதி, சமஅந்தஸ்து, சம வாய்ப்புகள் என்கிற உண்மை லட்சியத்தை அடைவதில் பெரும் தடைகள் தோன்றியுள்ளன.தற்போது, மத அடிப்படையில் இடஒதுக்கீடு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகின்றன. சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு என்கிற அடிப்படையில் மத ரீதியான இடஒதுக்கீட்டுக் கோரிக்கை வைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மத இயக்கங்கள் போராடி வருகின்றன.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் கொள்கை அளவில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான இடஒதுக்கீட்டு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. மத்திய மாநில அரசுகள் ஆங்காங்கு வாய்ப்புகள் உள்ள இடங்களில் மத ரீதியிலான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை அமல்படுத்தி வருகின்றன.இந்திய அரசியல் சாசன ரீதியாக ஆரம்பகாலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது பெரும்பான்மை இந்து சமூக மக்களை மையமாக வைத்தே அமைக்கப்பட்டது.

இந்து சமுதாயத்தில் இருந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களுக்கு மதம் மாறிச் செல்பவர்கள் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற அரசியல் சாசன ரீதியாகத் தகுதியற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். ஏனென்றால், இந்து சமுதாயத்தில் மட்டுமே சாதி ஏற்றத்தாழ்வுகளும், தீண்டாமைக் கொடுமைகளும் நிலவி வந்தது என அறியப்பட்டது. இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்களில் தீண்டாமை இழிவுகள் இல்லையென்றும், சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இல்லையென்றும், அனைவரும் சமம் என்றும் கருதப்பட்டது.

அதனால்தான், சாதி ரீதியான இடஒதுக்கீட்டுக் கொள்கை முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு அமல்படுத்தப்படவில்லை.கிறிஸ்தவர்களாக மாறிய தலித்துகள், தங்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றிக் கொண்ட பிறகும் தீண்டாமை இழிவுகள் நீங்கவில்லை என குற்றம்சாட்டி, தங்களை தலித் கிறிஸ்தவர்கள் என அழைத்துக் கொண்டு இந்து தலித்துக்கான இடஒதுக்கீட்டுச் சலுகைகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, "எஸ்.சி.', "எஸ்.டி.' பட்டியலில் தங்களை இணைத்திட போராடி வருகின்றனர். இதை கிறிஸ்தவ மதத் தலைமை அமைப்புகளும் ஆதரித்து வருகின்றன.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு தலித் கிறிஸ்தவர்களை "எஸ்.சி.' பட்டியலில் இணைப்பது என்பதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.இந்து மதத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு காண கிறிஸ்தவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டவர்கள் மதம் மாறியதன் மூலம் சில சலுகைகளை ஏற்கெனவே அனுபவித்து வருகின்றனர். அதனால், இந்து அரிஜனங்களின் சலுகைகளில் இடம் கேட்டுப் பெறுவது அவர்கள் இரட்டைச் சலுகையை அனுபவிப்பதாக ஆகிவிடும்.

ஏற்கெனவே இந்தப் பட்டியலில் இந்து தலித்துகள் உள்ளனர். இதில், கிறிஸ்தவ தலித்துகளும் இடம்பெற்றால், இந்து தலித்துகளின் இடங்களை மிகச் சுலபமாக கிறிஸ்தவ தலித்துகள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள். இதன் காரணமாக, இந்து தலித்துகளின் வாய்ப்புகள் முழுமையாகப் பாதிக்கப்படும். இந்து தலித்துகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.

இந்த விஷயத்தில் இஸ்லாமிய மத தலைமை அமைப்புகளை பாராட்டியே ஆக வேண்டும். இந்துக்களாக இருந்து முஸ்லிம்களாக மாறிய உடனேயே தங்களது சாதி அடையாளங்களை மதம் மாறியவர்கள் இழந்துவிடுகின்றனர். அனைவரும் முஸ்லிம்கள் என்று மட்டுமே கருதப்படுகின்றனர். முஸ்லிமாக மதம் மாறிய பிறகும் தீண்டாமை இழிவுகள் தொடர்வதாகச் சொல்லி, தலித் முஸ்லிம்கள் என்று இஸ்லாமியர்கள் யாரும் தங்களை அழைத்துக் கொள்ளவில்லை. "எஸ்சி' பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கவில்லை.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு என்கிற கோரிக்கை சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பிற்படுத்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டு சலுகையில் உள்ஒதுக்கீடாக முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் என சலுகைகளை அறிவித்தார்.மத அடிப்படையில் சலுகை வேண்டும் என போராடி வந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தன.

ஓராண்டு காலம் அமல்படுத்திய பிறகு கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் இதன் காரணமாக பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி மத அடிப்படையில் எங்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு சலுகையில் உள்ஒதுக்கீடு தேவையில்லை என முதலவரிடம் கிறிஸ்தவ அமைப்புகள் கோரிக்கை வைத்தன. முதல்வரும் கிறிஸ்தவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்தார்.

இஸ்லாமியருக்கான உள்ஒதுக்கீடு மட்டும்தான் இப்போதும் தொடர்கிறது.சாதி ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமை இழிவுகளையும் ஒழித்துக் கட்ட நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையின் பலன் இந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கே உரியதாகும். இதில், சாதி ரீதியாக வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளும், மத ரீதியாக வாக்கு வங்கி அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளும் தங்களது சுயநலத்துக்காக தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகைகளை கூறு போட்டு சிதைக்க முயற்சிக்கின்றன.

எங்கள் மதத்தில் சாதியக் கொடுமைகள் இல்லை என்று காரணம் காட்டி மதமாற்றத்துக்கு வழிவகுத்த பிறகு, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கோர ஊக்குவிப்பது என்பதுபோன்ற மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. ஒன்று கிறிஸ்தவ மதத்திலும் சாதிக் கொடுமைகள் தொடர்கின்றன என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.


இல்லையென்றால், இஸ்லாமிய மதத்தைப்போல, சாதிகளற்ற சமுதாயமாகக் கிறிஸ்தவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில், தாழ்த்தப்பட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது!

(கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி)

நன்றி:தினமணி

மனித வெடிகுண்டு தாக்குதலில் சவுதி இளவரசர் காயம்

அல் - காய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சவுதி அரேபிய இளவரசர் முகமத் பின் நயீஃப் காயத்துடன் உயிர் தப்பினார்.

ஜெட்டா நகரில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த இளவரசர் முகமத் நையீப், அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு திடீரென வந்த அல் - காய்தா தீவிரவாதி ஒருவன்,முகமது நையீப்புக்கு அருகே சென்று தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இதில் இளவரசர் நையீப் காயத்துடன் உயிர் தப்பினார்.அதே சமயம் வேறு யாருக்கும் காயமோ அல்லது உயிர்சேதமோ ஏற்படவில்லை.காயமடைந்த நயீப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதி நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பலியானான.இளவரசரை கொல்ல நடந்த முயற்சி சவுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக சவுதி உள்துறை அமைச்சகம் சமீபகாலமாக மேற்கொண்டு வரும் தீவிர பிரச்சாரம் மற்றும் சில நடவடிக்கைகள் காரணமாக ஆத்திரமுற்றே, அல் - காய்தா இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நோன்பு.. மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China)

வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் பெற்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.

நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.

இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.

காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.

ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.

குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.

பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.

நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.

எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.

ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.

இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :

நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகுதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.

வயிற்று உபாதைகள்:

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்) இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல்:

இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்.

மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

(கட்டுரையாளருடன் தொடர்புக்கு:
ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA
CHINESE TRADITIONAL MEDICINE
MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA
போன்: 0505258645
தமிழ்நாடு போன்: 9442871075)

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

1940 ஆம் ஆண்டில் இன்றைய சென்னை மெட்றாசாக இருந்தது.

அந்தக் கால மதராஸின் பகுதிகள் ஜார்ஜ் டவுன், பார்க் டவுன் என்றெல்லாம் அழைக்கப்பட்டன. மவுண்ட் ரோட்டில் இப்போது போல மக்கள் நடமாட்டம், நெருக்கடிகள், போக்குவரத்து நெரிசல்கள் அப்போது இல்லை. குறுக்கும் நெடுக்குமாக யார் வேண்டுமானாலும் போகலாம். பஸ்கள் கூட எப்போதாவதுதான் வரும்.

1940களில் பெட்ரோல் பஞ்சம் சில காலம் இருந்து வந்தது. பஸ்கள் பின்னால் ஒரு பெட்டியை நிறுவி அதற்குள் கரி நிரப்பி தீ மூட்டி புகை கக்கும்படி செய்து வந்தார்கள். அந்த சூட்டில் பஸ்கள் செல்லும். பஸ் கண்டக்டர் கரிப் பெட்டியை சுழற்றுவார். "சுந்தரம் மோட்டார்ஸ்' நிறுவனம் மட்டுமே பஸ்களை இயக்கி வந்தது. அரசு பஸ்கள் அப்போது இல்லை

இதுதவிர ட்ராம் போக்குவரத்து இருந்தது. மிக மெதுவாக செல்லும் இந்த வண்டிகளில் நடந்து கொண்டே ஏறி போகும்போதே இறங்கி பயணிப்பது மதராஸ்வாசிகளுக்கு ஒரு தனி சுகம். எழும்பூரில் இருந்து ஐகோர்ட் செல்ல டிராம்மில் கட்டணம் 2 அணா. இரு பக்கமும் கண்டக்டர் இருப்பார்.

மாம்பலம், தியாகராய நகர் போன்ற பகுதிகளில் வசதியானவர்கள் குடியிருப்பார்கள். இப்போதும் இருக்கும் சில பெரிய பழங்கால கட்டிடங்கள் அன்றைய நாகரிகத்தின் சின்னமாக இருந்தன. பிரபல சினிமா நடிக நடிகையர் தி.நகர், அடையாறு போன்ற இடங்களில்தான் வசித்து வந்தனர். பிற பகுதிகளில் ஓடு போட்ட வீடுகள், கூரை வீடுகள் அதிகம் இருக்கும். பல பகுதிகளில் தெருக்கள் முள் செடிகள் முளைத்து குண்டும் குழியுமாகவே இருக்கும்.

உயர்நீதிமன்றம் அருகேயுள்ள ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், அம்பீஸ் கபே போன்ற உணவு விடுதிகள் மிகப் பிரபலம். ஒரு அணாவுக்கு இரு போண்டாவும், இரண்டு அணாவுக்கு தோசையும், 1 ரூபாய்க்கு சாப்பாடும், 2 ரூபாய்க்கு கேரியர் சாப்பாடும் கிடைக்கும். 16 அணா ஒரு ரூபாய் ஆகும். பஜ்ஜி, மைசூர் பாகு, ஜாங்கரி, கேசரி போன்ற பலகாரங்கள் மிகப் பிரபலம்.

இந்தியா சுதந்திரம் அடையும் வரை, மதராஸில் பொழுதுபோக்க மெரினா பீச்சும், சினிமா தியேட்டரும் உண்டு. மாலை நேரத்தில் பீச்சுக்கு சென்றால் மிக சுத்தமாக இருக்கும். இங்கு பெரியவர்கள் இந்திய சுதந்திரத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். சினிமா தியேட்டரில் படம் பார்க்க கட்டணம் 25 காசு. ஹிந்தி, ஆங்கிலப் படம் அதிகம் போடுவார்கள். அண்ணா சிலை எதிர்புறம் மாடியில் நியூ எல்பில்ஸ்டன் தியேட்டர் உண்டு. 50 பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். ஆங்கிலேயர்கள் சாரட் வண்டியில் இங்கு படம் பார்க்க வருவார்கள்.

ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் அதிகமிருந்த காலம் அது. அதனால் நம் மக்கள் நாட்டு விடுதலையைப் பற்றிப் பகிரங்கமாக பேசமாட்டார்கள். போலீசார் தடியடிப் பிரயோகம் செய்வார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது.

"வந்தே மாதரம்' என்று சொல்லக் கூட அஞ்சினார்கள். செய்திப் பத்திரிக்கைகளில் கூட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பெரிய அளவில் செய்திகள் அவ்வளவாக போடுவதில்லை.

ஆனால் "தினமணி' நாளிதழ் ஆரம்பித்த உடன் இரண்டு தேசியக் கொடிகளை பத்திரிகையின் சின்னமாகத் துணிந்து பயன்படுத்தினார்கள். ராம்நாத் கோயங்கா தீவிர தேசபக்தர். அந்த உணர்வை அப்படியே தினமணி பிரதிபலித்தது. தேசிய நாளேடு என்ற தகுதியை வாசகர்களிடையே அப்போதே பெற்றது.

சில நாடக நடிகர்களுக்கு தேச பக்தி உணர்ச்சி இருந்தாலும் அவற்றை மேடைகளில் வெளிப்படுத்த முடியாமல் நாடகங்கள் போட்டு வந்தார்கள். டி.கே.எஸ். சகோதரர்கள் "தேச பக்தி' என்ற நாடகத்தை மேடை ஏற்றினார்கள். பாஞ்சால சிங்கம் பகத் சிங் வாழ்க்கையை மறைமுகமாக வெளிப்படுத்திய இந்த நாடகத்தைப் போட்டபோது அதற்கு போலீசார் தடை விதித்து விட்டார்கள். நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மீண்டும் அந்த நாடகத்தை அவர்கள் நடத்தினார்கள்.

1947 ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை அடைந்தபோது தெருக்களில் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டதை காணமுடிந்தது. பெரும்பாலான வீடுகளில் தீபாவளி கொண்டாடுவதுபோல் எண்ணெய் தேய்த்து குளித்து கதரில் புத்தாடை அணிந்து தெருக்களில் வெடி வெடித்து மகாத்மா காந்திக்கு ஜே என்று ஆரவாரம் செய்தார்கள். மயிலாப்பூரில் வசித்த தேசபக்த நடிகர் கே. சாரங்கபாணி போன்ற நடிகர்கள் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் ஊர்வலமாக வந்து கொண்டாடினார்கள்.

சுகுண விலாஸ் நாடக சபா அப்போது பிரபலம். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களை அவர்கள்தான் போடுவார்கள்.

பிரபல நாடகக் கம்பெனிகளின் நாடகங்கள் தொடர்ந்து நடக்கும். பாய்ஸ் கம்பெனி நாடகங்களைப் பார்த்து வெளியூர்களிலிருந்து எல்லாம் வருவார்கள்.

தியாகராஜ பாகவதர்தான் அன்றைய சூப்பர் ஸ்டார். அவர் எப்போதாவது மவுண்ட் ரோடுக்கோ, ஜார்ஜ் டவுனுக்கோ கடைத் தெருவுக்குத் துணிமணி மற்றும் நகைகள் வாங்க வருவார். அப்படி வருவதாக இருந்தால் 15 நாள் முன்னதாக அவர் கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அரசு உத்தரவே போட்டது. மவுண்ட் ரோடின் இரண்டு பக்கங்களிலும் தடுப்புகள் வைக்கப்படும். அந்த அளவுக்குக் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம் அவரைப் பார்க்கக் கூடும்.

சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் ஆயிரம் விளக்கு கபேயில் காபி சாப்பிட வந்து நான் பார்த்திருக்கிறேன். மூவிலாண்ட் என்கிற பெயர்ப் பலகையுடன் ஜெமினி ஸ்டூடியோ இருந்தது. ஸ்டூடியோ வாசலில் நடிகர்களை வேடிக்கை பார்க்க எப்போதும் ஒரு கூட்டம் நின்றபடி இருக்கும். இப்போதுபோல நடிகர்கள் பிகு பண்ணிக் கொள்ளமாட்டார்கள். பந்தாவே இல்லாமல் பழகுவார்கள்.

பிரபல நடிகைகள் தாங்களே காரை ஓட்டிக் கொண்டு போவதை வாயைப் பிளந்தபடி பார்க்கும் அப்பாவி ரசிகர்கள் கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டர் அருகில் இருந்த ரயில்வே கேட்டில் தவமிருப்பார்கள். இப்போது அங்கே மேம்பாலம் வந்துவிட்டது.

மதராஸ் இன்று சென்னையாக மாறிவிட்டாலும் ஒரு சில அன்றுபோல் இன்றும் மாறாமல் உள்ளன. உயர்நீதிமன்றத்தின் சிவப்பு வண்ணம், ஐய்யே போன்ற பேச்சு மொழிகள். அன்றுபோல் இன்றும் நடைபெறும் குழாயடிச் சண்டை போன்றவைகள் மதராசில் தனித் தன்மைகள் போலும்.

ஓடாத ஆறு ஒன்று சென்னையில் அன்றும், இன்றும் உள்ளது. ஆறு என்றால் தண்ணீர் ஓடும். குளத்தில் தண்ணீர் தேங்கும். ஆனால் சென்னையில் உள்ள கூவம் ஆறு நான் பார்த்த நாள் முதலாய் அன்றும், இன்றும் சாக்கடை தேங்கியே உள்ளது.


-நவீனன்
அன்று அண்ணாசாலை இன்று அண்ணாசாலை



சென்னையில் முதல் ஆங்கிலேய மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் கவர்னர் எட்வர்ட் வின்டர் என்பவரால் 1664 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. வாடகை இடத்தில் சிறியதாகத் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை அங்கே இங்கே என்று கோட்டைக்குள் சுற்றி, பிறகு ஆர்மேனியன் தெரிவில் (அரண்மனைக்கார தெரு) பல காலம் செயல்பட்டு வந்தது.

அக்டோபர் 15, 1772ல் ஜான் சுல்லிவன் என்பவரால் எழுப்பப்பட்டதுதான் இன்றைய பொது மருத்துவமனை. 1859 மற்றும் 1893ல் இந்தக் கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை பொது மருத்துவமனையில் இப்போதும் காணப்படும் பழைய கட்டடம் "செமினார் ஹால்' என்று அழைக்கப்படும் 1835 ஆண்டு கட்டப்பட்ட பகுதி மட்டுமே. ஏனைய இடங்கள் இடித்துக் கட்டப்பட்டவைதான்.

இந்தியாவின் முதல் ரயில் பாதை, சிந்தாதிரிப்பேட்டை பாலத்துக்கு அருகில்தான் 1836-ல் பரிசோதனைக்காகப் போடப்பட்டது. அடுத்த வருடமே, ஏ.பி. காட்டன் என்பவரால் ரெட் ஹில்ஸ் பகுதியிலிருந்து பரங்கிமலையை அடுத்த கல்குவாரிகள் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. இந்த ரெட் ஹில்ஸ் ரயில்வே என்பது காற்றழுத்தத்தாலும், மனிதர்கள் தள்ளுவதாலும் இயக்கப்பட்டதாம்!

1845-ல் மெட்றாஸ் ரயில்வே கம்பெனி எனப்படும் நிறுவனம் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1849-ல் இன்னொரு நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் தென்னகத்தின் முதல் ரயில்வே பாதையை நிறுவியது. 1853-ல் கர்னாடிக் நவாபுகளின் தலைநகரமான ஆற்காடையும், வாலாஜாபேட்டையையும் வட சென்னையிலுள்ள ராயபுரத்துடன் இந்த ரயில் பாதை இணைத்தது.

சென்ட்ரல் ரயில் நிலையம், 1873-ல் வியாசர்பாடி மெட்ராஸ் பாதை போடப்பட்டபோது நான்கே நடைமேடையுடன் கூடிய சிறிய ரயில்நிலையமாகத் தொடங்கப்பட்டது. 1907 வரை சென்னையின் தலைமை ரயில் நிலையமாகத் திகழ்ந்தது ராயபுரம்தானாம்.

இப்போதைய சென்ட்ரல் ரயில் நிலையக் கட்டடம் ஜார்ஜ் ஹார்டிங்ஸ் என்பவரால் வடிவம் கொடுக்கப்பட்டு சிஷோம் என்பவரால் பொலிவு ஏற்படுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் இருக்கும் மணிகூண்டு தயாரிக்கப்பட்ட வருடம் 1874. கட்டடம் முழுமையான ஆண்டு 1900. அதற்குப் பிறகு பல மாற்றங்கள் அந்தக் கட்டடத்தில் செய்யப்பட்டன என்றாலும், ஜார்ஜ் ஹார்டிங்ஸ் கற்பனை செய்த அதே வடிவம் இப்போதும் மாறாமல் இருக்கிறது என்பதுதான் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தனிச் சிறப்பு!

தகவலுக்கு நன்றி : தினமணி ஆசிரியர்

ஸ்ரீவைகுண்டம் கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வி ஏ‌ற்பு


அண்மையில் நடந்து முடிந்த ஸ்ரீவைகு‌ண்டம்,தொண்டாமுத்தூர் ச‌ட்ட‌ம‌ன்ற தொகு‌தி‌யி‌ல் வெ‌ற்ற‌ி பெ‌ற்ற கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ள் நேற்று பத‌வி ஏ‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.

சமீபத்தில் நடந்த 5 சட்டம‌ன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்பம், இளையான்குடி, பர்கூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ராமகிருஷ்ணன், சுப.மதியரசன், நரசிம்மன்ஆகியோர் கடந்த 25ஆ‌‌ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கந்தசாமி (தொண்டாமுத்தூர்), சுடலையாண்டி (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் நேற்று
முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர். அவை‌த் தலைவ‌ர் அறையில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ் ஆ‌கியோ‌ர் கலந்து கொண்டனர்.

நன்றி : சக்திவேல்,சென்னை

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை

140 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அத் தொகுதி புதிய எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை சார்பில், அதன் அமைப்பாளர் எஸ். நயினார் குலசேகரன், எம்.பி. சுடலையாண்டி எம்எல்ஏவிடம் அளித்த மனு:

ஸ்ரீவைகுண்டம் அணை 140 வருஷங்களாகியும் தூர்வாரப்படவில்லை. இந்த அணையின் மூலம் வடகால், தென்கால் என, 25,600 ஏக்கர் சாகுபடி பெற்று வருகிறது.

தாமிரபரணி ஆற்றின் பகுதியில் 98.26 ஏக்கர் வனத் துறை வசம் உள்ளது. எனவே, வனத் துறை அனுமதி பெற்றால்தான் அணையை தூர்வார முடியும் என தாமிரபரணி வடிநில கோட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள 29 குளங்களை தூர்வார ரூ. 28 கோடியில் புதிய திட்டம் ஒன்றை பொதுப்பணித் துறை தயார் செய்து, தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு கோரி அனுப்பியுள்ளது.

இத் திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த வெள்ளூர்குளம், பட்டர்குளம், செந்திலாம்பண்ணை குளம், பத்மநாபமங்கலம் குளம், கைலாசப்பேரி குளம், பேரூர் குளம், எசக்கன்குளம், பாட்டக்குளம், அகரம் குளம், கோரம்பள்ளம் குளம், பொட்டைக்குளம், பழையகாயல் குளம், ஆறுமுகமங்கலம் குளம், கொற்கை குளம், பேய்க்குளம் ஆகிய 15 குளங்களை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.

இக் குளங்களை தூர்வாருவதன் மூலம் வெள்ளக் காலங்களில் முழு அளவு தண்ணீரை தேக்கி இருபோக சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயம் செய்ய முடியும்.

எனவே, இந்த திட்டம் நிறைவேற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

துபாயில் இன்று 13வ‌து திருக்குர்ஆன் மாநாடு

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உல‌மா ச‌பை ஆகிய‌வை இணைந்து 13வ‌து திருக்குர்ஆன் மாநாடு ம‌ற்றும் திருக்குர்ஆன் விள‌க்க‌வுரை 200வ‌து வார‌ விழாவை இன்று (27ம் தேதி) த‌ராவிஹ் தொழுகையைத் தொட‌ர்ந்து துபாய் சிறிய ஜ‌ர்வூனி (கோட்டை) ப‌ள்ளியில் ந‌டத்துகின்றன.

துபாய் செம்பி இன்ட‌ர்நேஷ‌னல் குரூப்பின் கே.எஸ்.எம். முஹ‌ம்ம‌து யாசின் த‌லைமை வ‌கிக்கிறார். ச‌ங்கீதா உண‌வ‌க‌ ப‌ங்குதார‌ர் முஹிப்புல் உல‌மா ஏ. முஹ‌ம்ம‌து ம‌ஃரூப் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார்.

200 வார‌ த‌ஃப்ஸீர் டிவிடியினை ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இய‌க்குந‌ர் பி.எஸ்.ஏ. ஆரிஃப் ர‌ஹ்மான் வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை ஈடிஏ அஸ்கான் இய‌க்குந‌ர் செய்ய‌து எம். ஹ‌மீது ஸலாஹுத்தீன் பெற்றுக் கொள்கிறார்.

வேலூர் நாடாளும‌ன்ற இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான், அரேபியா டாக்ஸி இய‌க்குந‌ர் பி.எஸ்.எம். ஹ‌பீபுல்லாஹ், பாப‌நாச‌ம் ஆர்.டி.பி. க‌ல்லூரி அர‌பித்துறை பேராசிரிய‌ர் க‌விஞ‌ர் எம். ஷ‌ர‌புத்தீன் ஆலிம் மிஸ்பாஹி, தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை ஜாஹீர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.

ம‌வ்ல‌வி ஏ. முஹ‌ம்ம‌து இஸ்மாயில் ஹ‌ஸ‌னி, ஆவூர் தாருஸ்ஸ‌லாம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் ம‌வ்லானா அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் ம‌ன்ப‌யீ உள்ளிட்டோ ஏற்புரை நிக‌ழ்த்துகின்ற‌ன‌ர்.

தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன், அட‌ம‌ங்குடி அப்துல் ர‌ஹ்மான் ஆகியோர் இஸ்லாமிய‌ கீத‌ம் பாடுவ‌ர். வின்ன‌ர் குரூப் நிர்வாக‌ இய‌க்குந‌ர் டி.ஏ. அப்துல் க‌பூர் காகா நன்றியுரை நிக‌ழ்த்துகிறார்.

மேலும் விப‌ரங்க‌ளுக்கு: 050 - 4255 256

கைத்தறி நெசவாளர்களுக்கான சாந்த் கபீர் விருது - 2009

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சியில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ப‌ங்கேற்பு

துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சியில் 25.08.2009 செவ்வாய்க்கிழ‌மை இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் திருமிகு வேணு ராஜாம‌ணி த‌ன‌து துணைவியாருட‌ன் சிற‌ப்பு விருந்தின‌ராக‌க் க‌ல‌ந்து கொண்டார்.

துபாய் ஈமான் அமைப்பு வ‌ருட‌ந்தோறும் தேரா குவைத் ப‌ள்ளியில் சுமார் 4000 க்கும் மேற்ப‌ட்டோருக்கு த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியுட‌ன், வ‌டை, ச‌மோசா, ப‌ழ‌ம், ப‌ழ‌ர‌ச‌ம், பேரித்த‌ம் ப‌ழ‌ம், மின‌ர‌ல் வாட்ட‌ர் உள்ளிட்ட‌வ‌ற்றுட‌னான‌ உண‌வுப்பொருட்க‌ளை நோன்பு திற‌ப்போருக்கு இல‌வ‌ச‌மாக‌ ர‌ம‌லான் முழுவ‌தும் வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌ம் ம‌ட்டும‌ல்லாது, இந்தியாவின் ப‌ல்வேறு மாநில‌த்த‌வ‌ரும், அர‌பிய ம‌க்க‌ளும், பாகிஸ்தான், ப‌ங்க‌ளாதேஷ், ஆப்பிரிக்க‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌ ப‌ல‌ரும் தமிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியினை ஆர்வ‌த்துட‌ன் ப‌ருகி ம‌கிழ்கின்ற‌ன‌ர்.

இந்நிக‌ழ்ச்சியில் வ‌ருட‌ந்தோறும் ப‌ங்கேற்கும் த‌ன‌து ஆர்வ‌த்தை வெளிப்ப‌டுத்தி வ‌ரும் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி இவ்வ‌ருட‌மும் த‌ன‌து துணைவியாருட‌ன் ப‌ங்கேற்றார். அவ‌ருட‌ன் ஈடிஏ ஸ்டார் குழும‌ இய‌க்குந‌ர் அஹ்ம‌த் ச‌லாஹுத்தீன், அஹ்ம‌த் புஹாரி, ஈடிஏ அஸ்கான் ம‌னித‌ வ‌ள‌ மேம்பாட்டுத்துறை இய‌க்குந‌ர் எம். அக்ப‌ர் கான், வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான், இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ அற‌க்க‌ட்ட‌ளை க‌ன்வீன‌ர் கே. குமார், நாகூர் ஷேக் தாவூத், மீரான், ஈமான் நிர்வாகிக‌ள், புரவலர்கள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

இதில் ப‌ங்கேற்ற‌ இந்திய‌ க‌ன்ச‌ல் ஜெனர‌ல் வேணு ராஜாம‌ணி ஈமான் அமைப்பின‌ரின் சேவையினைப் பாராட்டினார்.

வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் ம‌த‌, இன‌ வேறுபாடின்றி அனைவ‌ரும் இஃப்தார் நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்று வ‌ருவ‌து இத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம் என‌க் குறிப்பிட்டார்.

இந்நிக‌ழ்ச்சியில் அமீர‌க‌த்தின் முன்ன‌ணி ப‌த்திரிகை ம‌ற்றும் தொலைக்காட்சி நிறுவ‌ன‌ங்க‌ளின் பிர‌திநிதிக‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

லாரன்ஸ் அறக்கட்டளை-உதவிய துபாய் தமிழ்ச் சங்க நிறுவனர்


நடிகரும் இயக்குநருமான ராகவேந்திரா லாரன்ஸ் நடத்தும் அறக்கட்டளைக்கு துபாயைச் சேர்ந்த சந்திரா ரவி நிதியுதவி வழங்கினார்.

துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளரான இவர், ரிதம் ஈவன்ட்ஸ் எனும் நிறுவனதின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார்.

ஏழை மாணவர்கள் , ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கு உதவி வரும் ராகவேந்திரா லாரன்ஸுக்கு தங்களால் முடிந்த அளவு உதவ முடிவு செய்த சந்திரா ரவி, சென்னை அசோக் நகரில் உள்ள லாரன்ஸின் அறக்கட்டளை அலுவலகத்துக்குச் சென்று இந்த உதவியை வழங்கினார்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்- சவூதி உத்தரவு


டெல்லி : பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க ஹஜ் யாத்திரையாக வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் மருத்துவ சான்றிதழுடன் வர வேண்டும், தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவை சவூதி சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

மேலும், தத்தமது நாட்டிலேயே பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் சான்றிதழ்களையும் யாத்ரீகர்கள் கொண்டு வர வேண்டும் எனவும் சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதவிர பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கும் 12 வயதுக்குட்பட்டோரையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் அனுமதிப்பதில்லை என்றும் சவூதி சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இந்த தடை காரணமாக இந்திய ஹஜ் கமிட்டி பல்வேறு நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.

அதன்படி காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகள் உடையோரை ஹஜ் யாத்திரைக்கு அனுப்பாமல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விரிவான நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் வருகிற 29ம் தேதி விவாதிக்கவுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாத்திரை செல்ல விரும்புவோருக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலம் மருத்துவ சான்றிதழ் அளிக்கவும், தடுப்பு மருந்து கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கென பிரத்யேகமான தடுப்பு மருந்து எதுவும் இல்லை. டாமிப்ளூ மாத்திரை மட்டுமே உள்ளது. அதையே தடுப்பு மருந்தாக கொடுக்கப் போகிறார்களா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு தெரிவிக்கவி்ல்லை.

சித்திரவதை செய்து தமிழர்களை கொன்றது இலங்கை ராணுவம்: விடியோ ஒளிபரப்பு


தம்மிடம் சிக்கிய ஒன்பது தமிழர்களை சித்திரவதை செய்து ஈவிரக்கமில்லாமல் இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்துள்ளது. விடியோவில் பதிவான இந்த கொடூர சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த "சானல் 4' தொலைக்காட்சி புதன்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது.

அந்த ஒன்பது பேரும் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை ஒரு ராணுவ வீரரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த விடியோ, ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் அமைப்பு மூலம் சானல் 4 தொலைக் காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடியோ காட்சி நிஜமானதல்ல என்றும் இத்தகைய ஈவிரக்கமற்ற கொடிய செயலில் தமது ராணுவம் ஈடுபடவில்லை என்றும் இலங்கை மறுத்துள்ளது.

சானல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சியை அடுத்து கொழும்புக்கு எதிராக கூறப்பட்டு வந்து போர்க்குற்றப் புகார்கள் சூடு புடித்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போரின்போது பிடிபட்ட புலிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதைக்குள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்று வருவதாக மனித உரிமைகள் அமைப்பும் இலங்கைத் தமிழர்களும் புகார் கூறிவந்தனர்.

சமாதானம் பேசுவதற்காக வெள்ளைக்கொடி பிடித்தபடி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் மற்றொரு தலைவர் சீவரத்தினம் பூலிதேவன் ஆகியோரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக மே மாதத்தில் செய்திகள் வெளியாகின.

தலைப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுக்கிடந்த புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இருக்கும் படத்தை அரசே தனது விடியோவில் வெளியிட்டது.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றப் புகார்கள் உண்மைதான் என்பதை சானல் 4 ஒளிபரப்பிய விடியோ நிரூபிப்பது போல அமைந்துள்ளது என்று தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரியில் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளை ஒடுக்கி நிர்மூலமாக்கிய இலங்கை ராணுவம், பிடிபட்ட போர்க்கைதிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்றதை ராணுவ வீரர் ஒருவரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார் என்று இந்த விடியோவை ஒளிபரப்பிய சானல் 4 தொலைக்காட்சி கூறியுள்ளது.

ஆனால் இந்த விடியோ காட்சியை தமக்கு எதிரான அவதூறு புகார் என்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக எந்த கொடிய சித்திரவதை செயல்களிலும் ராணுவம் ஈடுபட்டதில்லை. விடியோவில் தில்லுமுல்லு செய்தும் பொய்யான ஆவணங்களையும் வெளியிட்டு இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்கள் கடந்த காலங்களில் பல முறை நடந்துள்ளன. எனவே இந்த விடியோ பற்றி தீர ஆராய்ந்து உண்மையை உறுதி செய்யவேண்டும் என்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.


ஆனால், இந்த விடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது

தீராத நோய் இருந்தால் ஹஜ் பயணம் வேண்டாம்: அரசு அறிவுறுத்தல்

பன்றிக் காய்ச்சல் பீதி இருப்பதால், நாள்பட்ட மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை தள்ளிப் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர் மற்றும் செயல் அலுவலர் கே.அலாவுதீன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

இந்த ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோர் பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போட்டதற்கான தகுந்த தடுப்பூசி சான்றிதழைப் பெற வேண்டும். அதை, ஹஜ் விசா பெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும்.

நாள்பட்ட மற்றும் தீரா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த ஆண்டில் தங்களுக்கான ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை அவரவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தள்ளிப் போட வேண்டும். ஹஜ் பயணம் மேற்கொள்வோரும் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

புதன், 26 ஆகஸ்ட், 2009

24,000 பேருக்கு வேலை!-டிசிஎஸ்


பெங்களூர்: டிசிஎஸ் சமீபத்தில் தேர்வு செய்த 24,000 பேருக்கும் வேலை தரப்படும் என்று டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம் இதுபற்றிக் கூறுகையில், இனி ஐடி துறையில் பெரிய வீழ்ச்சிக் காலம் இருக்காது. வேகமான மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது ஐடி துறை. 20 சதவீத வளர்ச்சியை இந்தத் துறை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஆண்டு 46.3 பில்லியன் அளவுக்கு ஐடி துறை வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்த காலாண்டில் இது 3 முதல் 4 சதவிகித அளவு உயரும் வாய்ப்புள்ளதாக நாஸ்காம் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்.

சமீபத்தில் 24,000 பேரை பணிகளுக்காக தேர்வு செய்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் நிச்சயம் வேலை தரப்படும் என்றார்.

இவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்கெனவே பணி ஆணைகள் வழங்கப்பட்டுவிட்டனவாம். விரைவில் இரு தவணையாக மற்றவர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டு விடுமாம்.

அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை இழந்து தவிக்கிறேன்|||தலைவர் பேராசிரியர் இரங்கல்

மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் மறைவு குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி-

தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்த தமிழ் அறிஞர் - இலக்கியச் செல்வர் - முஸ்லிம் லீகின் மாபெரும் வழிகாட்டி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் இரண்டாவது புதல்வர் அப்துல் ஹக்கீம் அவர்கள் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்து இன்று (25-08-2009) செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது.

சகோதரர் அப்துல் ஹக்கீம் இளமைக்காலம் முதல் முஸ்லிம் லீக் இயக்கத்தோடு தன்னை பின்னிப் பிணைத்து கொண்டு வாழ்ந்தவர். அடையாறு பிரைமரி முஸ்லிம் லீக் அமைப்பதில் முன்னணியில் இருந்தவர்

காலப்போக்கில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாள ராக உயர்ந்தார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கிடைத்தது.

தலைமை நிலையச் செயலாளராக அவர் செயல் பட்ட காலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும் - எனக்கும் சட்டரீதியான பல்வேறு இடைய+றுகளும், ஏராளமான வழக்குகளும் நடைபெற்றன. அவைகளில் நாம் வெற்றியடைவதற்கு அரிய ஆலோசனைகளையும், உரிய தகவல்களையும் தந்து பெரும் ஒத்துழைப்பு அளித்தார்

சிறந்த நிர்வாகியாகவும், தொழில் வல்லுநராகவும் வெளிநாடுகளோடு தொடர்புடைய பல தொழில் அதிபர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் பெற்ற வராகவும் விளங்கியவர். அவருடைய அறிவுரையாலும், வழிகாட்டுதலாலும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் இன்றைக்கும் நன்றி கூறிக் கொண்டிருக் கிறார்கள்.

முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளிலும், தன்னை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பின்னர் தீவிரமாக இயக்கப்பணிகளில் அரசியல் கூட்டணி முடிவுகள், தேர்தல் சின்னம் தேர்வு செய்தல் போன்ற பிரச்சினை வரும்போதெல் லாம்ஆலோசனை சொல்லி வந்தார்.

என்னைப் பொறுத்த வரையில் பல நேரங்களில் அவருடைய ஆலோசனை பெற்று அதன்படி முடிவெடுத்தேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிட அவர் ஆலோசனை காரணமாக இருந்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

எம்.ஏ. பொது நிர்வாக பட்டம் பெற்று தேறியவர். அச்சுக்கலையில் தனிப்பட்டமும் பெற்றவர். படித்துக் கொண்டேயிருப்பதில் அவர் தந்தையை பின்பற்றி வாழ்ந்த சிறப்பு அவருக்கு உண்டு.

முஸ்லிம் சமுதாயத்திற்கும் - முஸ்லிம் லீகிற்கும் நாளேடு இல்லை என்ற குறையை நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காக ஹமெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குவ தற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர். தமது தந்தை சிராஜுல் மில்லத் அவர்களோடு இணைந்து நிறுவனத்தை பதிவு செய்து ஹமணிச்சுடர் நாளிதழை வெளியிடுவோராக இருந்து பணியாற்றியவர்

1987-லிருந்து ஹமணிச்சுடர் நாளேட்டை சிறந்த ஒரு பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சி மேற்கொண் டார். 1996-ல் சிராஜுல் மில்லத் அவர்கள் ஹமணிச்சுடர் நாளிதழுக்கு என்னைப் பொறுப்பாளராக்கிய சமயத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டில் பிரபலமான நாளேடாக மணிச்சுடரை ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகமூட்டியவர். இறுதி வரை மணிச்சுடர் வெளியீட் டாளராக தொடர்ந்து இருந்து மிகப் பெரிய சேவையை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்

அந்த அன்புச் சகோதரரை - நல்ல ஆலோசகரை - அப்பழுக்கற்ற முஸ்லிம் லீகரை - அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை நாம் இழந்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்
அவருடைய துணைவியார், ஒரே புதல்வி ஆகியோருக்கு அல்லாஹ் சபுரன் ஜமீல் எனும் உயர்ந்த உன்னதமான தாங்கும் சக்தியை அருள்வானாக. அவர் பிரிவால் வாடும் அவர்களின் சகோதரர்கள் அப்துல் ஹமீத் பாகவி, அப்துல் வஹாப், சகோதரிகள் அலவியா, ஃபாத்திமா முஸப்பர் மற்றும் உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் வானாக. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுவுலக மேலான பதவியை வழங்கி அருள்வானாக!

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முஸ்லிம் லீக் இயக்கத்தில் நிரப்பி தருவதற்கு தக்கவர்களை அவருடைய மறைவிற்கு இதயம் நிறைந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்! இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது இரங்கல் செய்தியில் குறிபிப்பிட்டுள்ளார்

முகமது அலி ஜின்னா மதச்சார்பற்றவர்: ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் தகவல்

பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா மதச்சார்பற்றவர் என்று ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார்.

முகமது அலி ஜின்னாவை தனது புத்தகத்தில் புகழ்ந்து எழுதியதற்காக பாஜக-விலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பாஜகவின் முக்கிய அங்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் இத்தகவலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் லோகமான்ய திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க அவர் பாடுபட்டார் என்றும் சுதர்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஜின்னாவுக்கு பல்வேறு முகங்கள் உள்ளன. வரலாற்றை சரியாக படித்தால் அவர் திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாக பாடுபட்டது தெரியும். மகாத்மா காந்தி வலியுறுத்தியிருந்தால் பாகிஸ்தான் பிரிவினையைக்கூட ஜின்னா கைவிட்டிருப்பார். ஜின்னா மிகச் சிறந்த மதச்சார்பற்றவர் என்று சுதர்சன் குறிப்பிட்டார்.

துருக்கியில் காலிப் ஆட்சியை, பிரிட்டிஷார் கலைத்ததைக் கண்டித்து அலி சகோதரர்கள் இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தனர். பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட கிலாஃபத் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்து-முஸ்லிம்களின் ஒற்றுமை வலுவடையும் என காந்திஜி கருதினார். ஆனால் இதற்கு ஜின்னா எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால் அவரது வாதத்தை எவரும் ஏற்கவில்லை. இது அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. இதனால் அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறி இங்கிலாந்து சென்ற அவர் 1927-ம் ஆண்டுதான் மீண்டும் இந்தியா திரும்பினார் என்றும் சுதர்சன் குறிப்பிட்டார்.

பாஜக-விலிருந்து ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டது அக்கட்சியின் உள் விவகாரம் என்றார்.

பாகிஸ்தான் குறித்து அத்வானி கருத்து தெரிவித்தபோது அதற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் அத்வானி உரிய விளக்கத்தை அளித்தார். அதைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும் சுதர்சன் கூறினார்.

இதனிடையே சுதர்சன் அளித்த பேட்டி குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், இந்தூரில் அளித்த பேட்டியின்போது பிரிவினைவாத வரலாறு குறித்து மட்டுமே சுதர்சன் பேசியதாகக் குறிப்பிட்டார்.

நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!

நாவைப் பேணி, பாவமன்னிப்புக் கோருவோம்!
(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

மாதங்களிலேயே மிகச்சிறந்த மாதமாக புனிதமிகும் ரமலான் மாதம் திகழ்ந்து வருகிறது. இம்மாதத்தை எவர் பெற்றுக் கொண்டாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் (2:185) என வல்லோன் அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளதன் மூலம் ரமலான் மாதத்தின் தனிப்பெரும் சிறப்பினை உணர்த்தியுள்ளான்.

தம் வாழ்க்கையில் பாவமே செய்யாத மனிதர்கள் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு எத்தனை பேர் சரியான பதிலை கூறிவிட முடியும்? அதுவும் தற்போதைய நாகரீக கலாச்சார வாழ்க்கையில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் மேலே கண்ட கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமே வரும். பாவத்திற்குரிய செயல்களில் ஒன்று மனிதன் தெரிந்தே பாவம் செய்தல் மற்றொன்று தனக்கே தெரியாமல் பாவம் செய்தல்.

மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பாவச் செயலை தூண்டும் நிலையிலேயே இருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுணர்வுடன் வாழ வேண்டும். பாவத்தின் முதல் துவக்கமாக மன இச்சையும் அடுத்ததாக மனிதனின் நாவும் இருப்பதை மறுக்க முடியாது!. மனம் போகும் போக்கில் வாழ ஆசைபடுதலே பாவத்தின் தலைவாசல் என கலீபா அலி (ரலி) அவர்கல் கூறியுள்ளார்கள். நாவால் பிறரின் மனதை புண்படுத்துபவர்கள் நம்மில் மிகுதமாக உள்ளனர்.

நாம் கூறும் ஒவ்வொரு சொல்லையும் நிதானத்துடன் சொல்ல முன் வராத வரை, சொல்லப்படும் அந்த வார்த்தைகளில் நமக்கே தெரியாமல் சில நேரங்களில் பாவம் கலந்து விடுகின்றன. "யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல் இழுக்கு ப்டடு" திருவள்ளுவரின் இந்த கூற்றும் நாவை பேண வேண்டிய அவசியத்தையே வலியுறுத்துகின்றன.

சொல்லிவிட்ட வார்த்தைக்கு நாம் அடிமை, சொல்லாத வார்த்தை நமக்கு அடிமை! என்ற பழமொழி கூட நம்மை சிந்திக்க வைக்கின்றன. ஆக மனிதனை பாவத்தின் பக்கம் தூண்டும் முக்கிய உறுப்பாக "நாவு" இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. பாவத்தின் பக்கங்களாய் பொய் பேச வைப்பதின் மூலம் நாவு தன் முகவுரையை தொடங்குகிறது. பிறரை பற்றி புறம் பேசுதல் மூலம் நடுவுரையை தருகிறது. அடுத்தவரின் விஷயத்தில் கோள் சொல்வதின் மூலம் தனது முடிவுரையை எழுதுகிறது.

மொத்தத்தில் தமது நேர்மையையும், ஒழுக்கத்தையும் குழி தோண்டி புதைத்து விடுகிறது. இவ்வளவு பெரிய கூரிய ஆயுதமான நாவை நாம் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். "சொல்லாதே செய்" என்ற வாக்கியத்தை சரிவர பேணியவர்கள் தான் ஆன்றோர்களாகவும், சான்றோர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.

"தவளை தன் வாயால் கெட்டது" என்ற பழமொழியை கூட நம்மை எச்சரிக்கத்தான் சொல்லி வைத்துள்ளனர் முன்னோர்கள். இவற்றையெல்லாம் சிந்தித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கும் பேச்சுக்களில் எதுவெல்லாம் பாவம் கலந்தது என்பதை நம்மால் யூகிக்க முடியாவிட்டாலும். அனுதினமும் படைத்தவனிடம் கையேந்தி பாவ மன்னிப்பு கோருவதே மிகவும் அவசியமாகும்.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் படியில் இருந்தபோது தமது கைகளை உயர்த்தியவர்களாக ஆமீன், ஆமீன், ஆமீன் என மூன்று முறை தொடர்ந்து கூறினார்கள்.

பிறகு மிம்பரில் இருந்து கீழிறங்கியதும் தோழர்களெல்லாம் யாரசூலுல்லாஹ் எப்போதும் கண்டிராத ஒரு காட்சியை இன்று கண்டோமே? என கேட்டதற்கு நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:- வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்து "ரமலானை அடைந்தும் அதில் பாவமன்னிப்பு தேடாதவன் நாசமடைவானாக" என கூறியதும் அதற்கு நான் ஆமீன் சொன்னேன் என்ற விபரத்தை தம் தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

பிறகு இரண்டு முறை எதற்காக ஆமீன் சொன்னார்கள் என்ற விபரத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம். (இந்த நிகழ்வை ஹழ்தத் கஃபு இப்னு உஜ்ரத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளது ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஆக ரமலான் மாதத்தில் நாம் அதிகமதிகம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதை தான் மேலே கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.

புனிதமிகும் ரமலானில் நமது நாவைப் பேணும் பயிற்சியை தொடங்குவதுடன் பாவ மன்னிப்பு தேடுபவர்களாகவும் நம்மை பழக்கிக் கொள்வோம். இறைவன் நம் அனைவரின் நாவுகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து மன்னித்து அருள் பாலிப்பானாகவும். ஆமீன்

LinkWithin

Blog Widget by LinkWithin