ஞாயிறு, 31 மே, 2009

10ஆ‌ம் வகு‌ப்பு சிறப்பு துணைத்தேர்வு‌: நாளை முதல் விண்ணப்ப‌ம்

10ஆ‌ம் வகு‌ப்பு., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வில் தோ‌‌ல்‌வி அடை‌ந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ம் நாளை முத‌ல் ‌வ‌ழ‌ங்க‌ப்படு‌‌கிறது.

இது தொட‌ர்பாக அரசு தேர்வுகள் சென்னை மண்டல துணை இயக்குனர் மு.மனோகரன் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 10ஆ‌ம் வகு‌ப்பு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வில் தோ‌ல்‌வி அடை‌ந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் 5ஆ‌ம் தேதி வரை வழங்கப்படும்.

பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் விண்ணப்பத்தை பெற்று 5ஆ‌ம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். தனித்தேர்வர்கள் அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இணையதள‌ம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுக்கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலமும், அரசு கருவூலக சீட்டாகவும் செலுத்த வேண்டும். ஜூன் 5ஆ‌ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin